Tuesday 29 May 2012

தமிழ்த்தேசியத்தின் உண்மை நாதம்- உண்மையின் முன் நடுநிலை என்பது கிடையாது


தமிழ்த்தேசியத்தின் உண்மை நாதம்- உண்மையின் முன் நடுநிலை என்பது கிடையாது
தமிழ்த்தேசியத்தின் உண்மை நாதமாய் உலகப்பரப்பெங்கும் இணையம் ஊடாக தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தில் உங்களுடன் வாகை தொலைக்காட்சி.
 “வாகை தொலைக்காட்சி” நேயர்களுக்கு வணக்கம் ! 
தமிழ்மொழி பேசும் நாம் உலக சனத்தொகையில் எட்டாவது இடத்தில் உள்ளோம். எமெக்கென பூர்வீகமாக வாழ்வதற்குரிய தாயக பூமி இருந்தும், அரசியல், கல்வி, கலாச்சாரம், பண்பாடு, பொருண்மியம் போன்ற அடிப்படை உரிமைகள் கூட கிடைக்காமல் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். “வாகை எனும் இணையத் தொலைக்காட்சி” அனைத்து தமிழ் மக்களின் கருத்துக்களையும் அரசியல், சமூக விழுமியங்களையும், மக்களுக்கு தெரியப்படுத்துவதும், அவர்களை விடுதலை நோக்கிய இலக்கில் இணைப்பதும் இதன் முக்கிய செயற்பாடாகும். இவ் இணையத் தொலைக்காட்சியானது தமிழ்த்தேசியம், தன்னாட்சி, தமிழீழ விடுதலையின் தேவையை உணர்த்தும் விதமாகவும் இயங்கும். அத்துடன் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணிகள் தொடர்பாக மிக அழுத்தம் திருத்தமாக தெளிவுபடுத்துவதோடு சுயநிர்ணயம், அரசியல், கல்வி, கலை கலாச்சாரம், மற்றும் தமிழ் விழுமியங்களின் முற்போக்கு சிந்தனைகள் உள்ள அனைத்துக் கருத்துக்களையும் இவ் இணைய தொலைக்காட்சி உலகப்பரபெங்கும் ஒளி பரப்பும். இத் தொலைக்காட்சி ஒரு பக்கச் சார்பற்ற வகையிலும் ஏனைய ஊடகங்களிற்கு பங்கம் விளைவுக்காத வகையிலும் இயங்கும். இவ் இணைய தொலைக்காட்சிக்கு உலகெங்கும் இருக்கின்ற அனைத்து அமைப்புக்கள், நிறுவனங்கள், மற்றும் தனிநபர்களின் கருத்துக்கள், பிரசுரங்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் அனைத்து ஆக்கங்களையும் வரவேற்கின்றோம்.தங்களது ஆக்கங்கள், நிகழ்வுகள், மேற்க் குறிப்பிடப்பட்ட விடையங்களிக் கருத்தில் கொண்டதாக அமைதல் வேண்டும். இதற்குப் பொறுப்பானவர்களே நிகழ்ச்சிகள் காட்சிப் படுத்துதல் தொடர்பான இறுதி முடிவினை தீர்மானிப்பார். இத் தொலைக் காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்ற நிகழ்வுகள் மீள் பிரதியாக்கப்படுதலோ அல்லது திரிவுபடுத்தப்படுதலோ தவிர்க்கப்பட வேண்டும்.
நன்றி 
என்றும் அன்புடன்
 “வாகை தொலைக்காட்சி” நிர்வாகம் 
தொடர்புக்கு:- வாகை தொலைக்காட்சி மின்னஞ்சல்: vaakaitv-live@mail.com